கொரோனா வைரஸை எதிர்கொள்ள நாட்டு மக்கள் அனைவரும் கைகோர்க்குமாறு வேண்டுகோள்

கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்துடன் கைகோர்க்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். 

பொது மக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம். இலங்கை முதிர்ச்சியைக் கொண்ட நாடாகும். அறிவு மற்றும் ஐக்கியம் என்பவற்றுடன் முன்னோக்கிப் பயணித்து வைத்திய ஆலோசனைகளைக் கடைப்படித்து சவாலை எதிர்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் அனைத்து பிரஜைகளிடமும் கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா வைரஸ்தொடர்பாக இலங்கை மக்கள் அடைந்துள்ள அச்சம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *