இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்வு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் ஏழு பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர்கள் இத்தாலியில் இருந்து வருகை தந்தவர்களாவர். கந்தகாடு கண்காணிப்பு நிலையத்திலிருந்து பொலன்னறுவை வைத்தியசாலைக்கு அனுப்பட்டுள்ளனர்.
இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது