கத்தாரில் கொரோனா வைரஸ் அச்சத்தில் பள்ளிவாசல்களுக்கு புதிய சட்டம் அமுலில்
கத்தாரில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தொழுகைக்காக பள்ளிகளை திறந்து, மூடுவது தொடர்பாக புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சு(அவ்காப்). ஒவ்வொரு தொழுகைக்கு 15 நிமிடங்கள் முன்பதாக பள்ளிகளைத் திறந்து, தொழுகை முடிந்து 15 நிமிடங்களில் பள்ளிகளை மூடுமாறு பள்ளி நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதான் (பாங்கு) சொல்லப்பட்டதும் பள்ளிகளுக்கு விரைந்து தொழுகைகளை உடனடியாக நிறைவேற்றுமாறும், தொழுகை நேரங்களில் பள்ளிகளில் ஜன்னல்களை அகல திறந்து கைக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் இருமல், மற்றும் காய்ச்சல் உள்ளவர்கள் தொழுகைக்காக பள்ளிகளுக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அவ்காப் பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது