சீனா மற்றும் சவுதி அரேபியாவிற்கான விமான சேவையை இலங்கை நிறுத்தியது
சீனா மற்றும் சவூதி அரேபியாவின் ஜேடா ஆகியவற்றுக்கான விமான சேவைகளை ஸ்ரீலங்கான் விமான சேவைகள் நிறுவனம் இடைநிறுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுகின்ற காரணத்தினால் இந்த தற்காலிக முடிவினை நிறுவனம் எடுத்துள்ளது.
இதன்படி எதிர்வரும் 10ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதிவரை சீனாவுக்கான விமான சேவைகளும், வருகின்ற 15ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 30ஆம் திகதிவரை ஜேடாவுக்கான விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.