தலைவர் பதவியை நிராகரித்தார் கரு ஜயசூரிய
பிரிந்த நிலையில் காணப்படும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையை தாம் பொறுப்பேற்க தயார் இல்லை என அக்கட்சியின் சிரேஷ்ட தலைவரான சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
சஜித் அணி புறம்பான பாதையில் பொதுத்தேர்தலை எதிர்கொள்ள தீர்மானித்துள்ள நிலையில், ரணில் அணி யானை சின்னத்தில் களமிறங்க முடிவெடுத்துள்ளது.
இந்நிலையில் தேர்தலை வழிநடத்தவும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையை பொறுப்பேற்கவும் சபாநாயகர் கருவுக்கு கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது குறித்து இன்று திங்கட்கிழமை கருத்து வெளியிடட சபாநாயகர் கரு ஜயசூரிய மேற்கண்டவாறு கூறியுள்ளார்.