மொபைல் போன்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா

உலகளவில் கடுமையான அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து செல்போன்களும் தப்பவில்லை என தெரியவந்துள்ளது.

சீனாவில் உருவான இந்த உயிர்க்கொல்லி வைரஸ் உலகம் முழுவதிலும் 40 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது.

இந்த நோயால் 82 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். நோயின் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் சீனாவுடனான வர்த்தக தொடர்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

அதேபோல் இந்தியாவும் தன்னுடைய வர்த்தக தொடர்பை நிறுத்தி வைத்துள்ளது. அந்த வகையில், இந்தியா முழுவதும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செல்போன்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் சந்தையில் சீனாவின் செல்போன்களுக்கு எப்பொழுதும் தனி வரவேற்பு இருந்து வந்த நிலையில் இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் சீனாவை சேர்ந்த செல்போன்களை வாங்குகின்றனர்.

இந்நிலையில், சீனாவில் இருந்து செல்போன்கள் எதுவும் வராததால் இந்திய சந்தையில் உள்ள புதிய மொடல் செல்போன்கள் அனைத்தும் ஆயிரம் முதல் 5000 வரை விலை உயர்ந்துள்ளது. மேலும், கையிருப்பு தீர்ந்தால் செல்போன்களை எவ்வாறு பெறுவதென்று தெரியாமல் வழி தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

POCO செல்போன்கள், ஒரு மாதத்திற்கு மட்டுமே இருப்பில் உள்ளன. இதேபோல் சியோமி, ஹூவேய், விவோ ஆகிய பிராண்டுகளுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்படும் என்று தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *