பெண் துப்பரவு தொழிலாளியிடம அத்துமீறிய அரசியல்வாதி

கோவை வரதராஜபுரத்தில் இஎஸ்ஐ மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் ஆண் மற்றும் பெண்கள் துப்புரவு பணியாளர்களாக வேலைசெய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பெண் துப்புரவு தொழிலாளி ஒருவர் பெண்கள் கழிவறையை சுத்தம் செய்ய சென்றுள்ளார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற ஜோதி என்பவர் பெண்கள் கழிப்பறைக்குள் நுழைந்து பெண் துப்புரவு தொழிலாளியிடம் அத்துமீறியுள்ளார்.
இதனால் அந்த பெண் கத்தி கூச்சலிட, ஜோதி ஆத்திரத்தில் அந்த பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் துப்புரவு தொழிலாளி சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜோதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட ஜோதி, பாஜகவின் எஸ்சி, எஸ்டி பிரிவின் பொறுப்பாளராகவும், தமிழ்நாடு தூய்மை காவலர் பொது தொழிலாளர் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *