இலங்கையில் இனவாதத்தை தூண்டுவதற்கு நோர்வே நிதி உதவி

இலங்கையில் இனவாதத்தை தூண்டுவதற்கு பொதுபல சேனாவுக்கு நோர்வே அரசாங்கம் நிதி வழங்கியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக நேற்று முன்தினம் முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ சாட்சியம் வழங்கியபோது இதனை கூறியுள்ளார்.

நோர்வே நாட்டிற்கு பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் அழைக்கப்பட்டு இனவாத பிரச்சினையை ஏற்படுத்தும் போதனைகள் வழங்கப்பட்டதாகவும் விஜேதாச எம்.பி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *