வெளிநாட்டு பயணிகள் மற்றும் உம்ரா யாத்திரிகளுக்கு வீசா இடைநிறுத்தம்
மத்தியகிழக்கு நாடுகளிலும் பரவ ஆரம்பித்துள்ள ஆட்கொல்லி வைரஸின் அச்சம் காரணமாக வெளிநாட்டு பயணிகள் மற்றும் புனித உம்ராஹ் யாத்திரிகர்களுக்கு வீசா வழங்குவதை சவூதிஅரேபியா தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.இதன்படி புனித மதீனா நகர் பள்ளிவாசலுக்குள் சுற்றுலா பயணிகள் பிரவேசிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சுமார் 7 லட்சம் யாத்திரிகர்கள் புனித உம்ராஹ் கடமையை நிறைவேற்றுவதற்காக தற்போது அங்கு தங்கியிருப்பதாகவும் சவூதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.