பெண்ணை ஏமாற்றி வங்கி கணக்கில் 28 இலட்சம் கொள்ளை
பெண்ணை ஏமாற்றி வங்கி கணக்கில் 28 இலட்சம் கொள்ளை!
பெண்ணொருவரின் வங்கி அட்டையை வஞ்சமான முறையில் பெற்று 28 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் பதுளையில் இடம்பெற்றுள்ளது.
தனியார் வங்கியொன்றிலிருந்து குறித்த பெண்ணின் வங்கி அட்டையை பயன்படுத்தி 28 இலட்சம் ரூபாவை கொள்ளையிட்டுள்ளார்.
பதுளையை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான குறித்த சந்தேக நபர் புந்தல பகுதியை சேர்ந்த பெண்ணொருவரையே இவ்வாறு ஏமாற்றியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்