60 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் இல்லாமல் போகும் நிலை
எதிர்வரும் மாதம் 2ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றம் 5 வருடங்கள் பூர்த்தியாவதற்கு முன்னர் கலைப்பதனால் 60 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒய்வூதியம் இல்லாகும் போகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
சமகால அரசாங்கத்திற்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நல்ல நேரம் என்பதனால் அன்றைய தினத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் மார்ச் மாதம் 11 – 17ஆம் திகதியில் பொது தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.