வவுனியாவில் விபத்து நால்வர் பலி! பலர் படுகாயம்
வவுனியா பன்றிக்கெய்தகுளம் பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்க்கப்பட்டுள்ளனர் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியாவில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்ற பஸ், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற வேனும் மோதியதில் இவ் விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தை அடுத்து பஸ் வண்டிக்கு பிரதேச மக்கள் தீ வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.