மஹிந்த அணியின் தேர்தல் வெற்றிக்கு உரிமை கோரும் மைத்திரி அணி
ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு கிடைத்திருக்காவிட்டால், கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெற்றிருக்க முடியாது என அந்த கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
காலம் இரண்டு கட்சிகளையும் ஒன்றாக இணைத்துள்ளது. இதன் ஊடாக வெற்றி பெற முடியும். எதிர்வரும் பொதுத் தேர்தலில் விருப்பு வாக்குகளை பெறும் பிரச்சினை காரணமாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கூட்டணியின் தவிசாளர் பதவியை வழங்கியதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் சிலர் குற்றம் சுமத்துவதாகவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.