பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடுமாறு ரிஷாத்திற்கு சஜித் அழுத்தம் கொடுத்தாரா?

எதிர்வரும் பொதுத் தேர்தலில் கூட்டணியில் இணைந்து போட்டியிடாமல் தனித்து போட்டியிடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு அறிவித்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பௌத்த சங்க சபையினரின் கோரிக்கைக்கு அமைய எதிர்க்கட்சித் தலைவர் இந்த அறிவிப்பை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் ரிஷாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும் சிங்கள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
வடக்கு, கிழக்கு, களுத்துறை, கேகாலை, கொழும்பு, கண்டி மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் வேட்பாளர்களை நிறுத்துவது என ரிஷாட் பதியூதீன் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *