திருகோணமலையில் நீரில் மூழ்கி நால்வர் உயிரி
திருகோணமலை – கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதவாச்சி குளத்தில் மூழ்கி மாணவர்கள் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
பதுளை – ஹாலியெலவில் இருந்து சுற்றுலா சென்ற மாணவர்களே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை 6 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஹாலியெல பகுதியிலுள்ள பாடசாலையில் தரம் 10 இல் கல்விகற்கும் மாணவர்களே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு கோமரங்கடவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.