கணவனிடம் கர்ப்பம் அடைந்திருப்பதை கூறிய மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவன்

கர்ப்பம் அடைந்திருப்பதை ஆசையுடன் கூறிய மனைவி – பிளேடால் கழுத்தை அறுத்த கணவன்…!

கர்ப்பம் அடைந்திருப்பதை ஆசையுடன் கூறிய ம னைவியை அவருடைய க ணவன் கழுத்தை அ றுத்துக் கொலை செய்துள்ள கொடூர சம்பவம் பிரேசிலில் அரங்கேறியுள்ளது.

பிரேசில் நாட்டை சேர்ந்த பிரான்சின் டோஸ் சாண்டோஸ் (22) என்பவர் அழகுக்கலை நிபுணராக பணிபுரிந்து வந்தார். இவர் மார்செலோ அராஜோ (21) என்கிற இளைஞரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இந்த தம்பதியினருக்கு நான்கு வயதில் ஒரு மகளும், இரண்டு வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் மூன்றாவது முறையாக கர்ப்பம் தரித்த பிரான்சின், ஆசையாக தன்னுடைய கணவனிடம் கூறி மகிழ்ந்துள்ளார். அப்போது கிறிஸ்துமஸ் விருந்துக்கான திட்டங்களைப் பற்றி இருவரும் விவாதித்துக்கொண்டிருந்துள்ளனர்.

பின்னர் வாக்குவாதம் முற்றிய நிலையில், கணவரை சமாதானப்படுத்துவதற்காக பிரான்சின் படுக்கையறைக்குப் அழைத்து சென்றுள்ளார்.

ஆனால் ஆத்திரமாக இருந்த மார்செலோ, படுக்கையறையில் இருந்தபோது திடீரென பிளேடால் மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *