கோழிகளை காப்பாற்ற சென்ற 3 பேர் குழியில் விழுந்து பலி
அவிசாவளையில் கைவிடப்பட்டிருந்த சுரங்க குழிக்குள் இறங்கிய மூவர் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்த துயர் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
சுரங்க குழிக்குள் விழுந்த இரண்டு கோழிகளை காப்பாற்ற சென்ற சென்றவேளையிலேயே அவர்களுக்கு இந்நிலைமை ஏற்பட்டது.
17,25 மற்றும் 27 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இது தொடர்பில் அவிசாவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.