பாகிஸ்தானில் அவசர கால நிலை பிரகடனம்

பாகிஸ்தானில் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வெட்டுக்கிளிகளின் தாக்கம் காரணமாக குறித்த தீர்மானம் பெறப்பட்டுள்ளது. வெட்டுக்கிளிகள் கோதுமை பயிர்களை அழித்து வருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வெட்டுக்கிளி தாக்குதல் தற்போது அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக பாகிஸ்தான் உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

இதனால் இலட்சக்கணக்கான ஹெக்டெயர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் நட்டம் ஏற்பட்டுள்ளது. குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அவசர கால நிலையை பிரகடனப்படுத்த பாகிஸ்தான் அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *