கை சின்னத்துக்கு கை கொடுக்காதாம் மொட்டு கூட்டமைப்புக்குள் இழுபறி

ஜனாதிபதி தேர்தலுக்கு முன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக புதிய கூட்டமைப்பை உருவாக்குவது தொடர்பில் பொதுஜன ஐக்கிய முன்னணியின் நிறைவேற்ற சபையினால் எட்டப்பட்ட தீர்மானத்துக்கு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இணக்கம் தெரிவித்திருந்த நிலையில் மொட்டு சின்னத்தை விட்டுக் கொடுப்பதற்கு சிறிலங்கா பொதுஜன பெரமுனவினர் பின்வாங்கும் தோடு பிரதான இரு கட்சிகளையும் சேர்ந்த உறுப்பினர்களுக்கிடையில் மாறு பட்ட கருத்துக்கள் நிலவி வருவதால் கூட்டமைப்பு அமைப்பதில் இழுபறி நிலை தொடர்ந்த வண்ணமே உள்ளது.இந்நிலையில் பொது ஜன பெரமுன மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்பன இனைந்து அமைக்கும் கூட்டமைப்பின் பெயர் எதுவாயினும் அதன் சின்னம் மொட்டாகவே இருக்கு வேண்டும் என்பது பொதுஜன பெரமுனவை சேர்ந்த அநேகமானவர்களின் நிலைப்பாடாக இருந்து வருகின்றது இது குறித்து கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அறிவித்துள்ளதாக கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *