ரஜினிகாந்த் ஜோடியாக மூண்டும் நயன்தாரா

மீண்டும் ரஜினி படத்தில் நயன்தாரா…!
படக்குழு அறிவிப்பு
புதிய அரசியல் கட்சி, பெரியார் சர்ச்சை, வருமானவரித்துறை பிரச்சினை என தொடரும் பரபரப்புகளுக்கு இடையில் படப்பிடிப்பில் உற்சாகமாக பங்கேற்று வருகிறார் ரஜினிகாந்த்.
தர்பாருக்குப் பிறகு சிறுத்தை சிவா இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கிறார். விரைவில் படத்தின் பெயர் அறிவிக்கப்படலாம்.
ரஜினியின் இந்த 168-வது படத்தில் நயன்தாரா நடிப்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில், படப்பிடிப்பு இரவு பகலாக நடந்து கொண்டிருக்கிறது. நடிகை கீர்த்தி சுரேஷ், குஷ்பு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இதுவொரு குடும்ப செண்டிமெண்ட் கலந்த கமர்ஷியல் படம் என்கிறார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படியொரு குடும்பக் கதையில் நடிப்பதை ரஜினி விரும்புகிறார்.
அதனால் மிகப்பெரிய நட்சத்திரக் கூட்டமே படத்தில் இணைந்திருப்பது படத்திற்கு பிரம்மாண்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தர்பார் படத்தைத் தொடர்ந்து ரஜினியுடன் நயன்தாரா நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு இணையாக பேசப்படுகிறவராக நயன்தாரா இருக்கிறார்.
2005 ஆம் ஆண்டு தமிழில் ஐயா திரைப்படம் மூலம் அறிமுகமாகி பதினைந்து ஆண்டுகளாக ஜொலித்து வருகிறார்.
மலையாளத்தில் மனசினகாரே என்ற படத்தின் மூலம் அறிமுகமான டயானா மரியா குரியன் என்ற இயற்பெயரைக் கொண்ட நயன்தாராவின் காட்டில் எப்போதுமே மழைதான்.
அறம் படத்தில் முதன்மை நாயகியாக நடித்து தனக்கான மிகச்சிறந்த இடத்தை தக்கவைத்துக் கொண்டார். பெண் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கும் அளவுக்கு அவருக்கான இமேஜ் உயர்ந்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *