மனைவியை ஏமாற்றி வேறொரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த நேரத்தில் மர்ம உறுப்பு சிக்கியதால் நடந்த விபரீதம்

மனைவியை ஏமாற்றி வேறொரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்த கணவன்: ஹோட்டலில் நேர்ந்த விபரீதம்

கென்யாவின் Lodwar பகுதியில் உள்ள வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வரும் நபர், அந்த வாடகை வீட்டின் உரிமையாளராக இருக்கும் பெண்ணுடன் தகாத தொடர்பில் இருந்துள்ளார்.
இதை அவரது மனைவியும் உறுதி செய்யுள்ளார். அதாவது கணவன் வீட்டை விட்டு வெளியேறும் நேரத்தில் அந்த வீட்டின் உரிமையாளர் பெண்ணுடன் வெளியில் சென்றுவிடுவாராம், இதனால் அவர் கணவனிடம் இது குறித்து தொடர்ந்து சண்டை போட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் மனைவியை ஏமாற்றி அங்கிருக்கும் ஹோட்டல் ஒன்றிற்கு வீட்டின் உரிமையாளர் பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது அங்கு உல்லாசமாக இருந்த போது, மர்ம உறுப்பு சிக்கிக் கொண்டதால் இருவரும் விபரீதமான பிரச்சனையை சந்தித்துள்ளனர்.
இதனால் இது குறித்த தகவல் உடனடியாக ஹோட்டலில் இருக்கும் ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின் அவர்கள் பொலிசாருக்கு தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார், இருவரையும் அப்படியே காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதையடுத்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு, பொலிசார் தொடர் விசாரணை நடத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *