முதலிரவில் மனைவிக்கு தூக்கு போடுவது எப்படி என்று நடித்து காட்டிய கணவர் பலி
முதலிரவில் மனைவிக்கு தூக்குப் போட்டுக் கொள்வது எப்படி என ஒரு ஸ்டூல் மீது ஏறி நடித்துக் காட்டிக் கொண்டிருக்கும்
போது திடீரென காலுக்குக் கீழே இருந்த நாற்காலி நழுவி விழுந்துள்ளது; அதைப் பார்த்த மனைவி சத்தம் போட்டுள்ளார். அதற்குள் கழுத்தில் கயிறு இறுகியதால் முகமது அலி துடிதுடித்துள்ளார். அவரது மனைவியின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, முகமது அலியை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்