மசூதிகளில் பெண்கள் தொழுவத்தில் தடைகள் இல்லை

டெல்லி: மசூதிகளில் தொழுகைக்காக பெண்கள் நுழைய இஸ்லாத்தில் எந்த தடையும் இல்லை என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. சபரிமலை கோயில், மசூதிகள், பார்சி வழிபாட்டு தலங்களுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் கேட்டதற்கு அகிய இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், மசூதிகளில் தொழுகைக்காக பெண்கள் நுழைய தடை இல்லை என்றபோதிலும், கூட்டுத் தொழுகையில் பெண்கள் பங்கேற்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல.

இந்த விவகாரம் முற்றிலும் மத வரம்புக்கு உட்பட்டது என்பதால், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத வழிபாட்டு நடைமுறைகள் தொடர்பான விவகாரங்களில் சுப்ரீம் கோர்ட் தலையிட்டு, வழிகாட்டுதல்கள் வழங்குவது சரியாக இருக்காது. இது அவர்களின் தனிப்பட்ட முடிவு. மத விவகாரங்களை அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரும் விவகாரங்களில் நான் இணைய முடியாது என குறிப்பிட்டுள்ளது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *