சுதந்திர தினத்தில் சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம்
சுதந்திரதின நிகழ்வில் சிங்கள மொழியில் மட்டுமே தேசியகீதம்! உறுதிப்படுத்தியது அரசாங்கம்!!
” பெப்ரவரி 4 ஆம் திகதி நடைபெறும் தேசிய சுதந்திரதின நிகழ்வில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும். வடக்கில் நடைபெறும் நிகழ்வுகளில் தமிழிழ் இசைக்கப்படலாம்.”
இவ்வாறு பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.