சஜித்துக்கு ஆதரவாக கூட்டமைப்பு யாழில் இன்று மாபெரும் பரப்புரை! – பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் உரை; சம்பந்தன் சிறப்புரை

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை மாபெரும் பரப்புரைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் பிற்பகல் 3 மணிக்கு யாழ். நல்லூர் முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள சங்கிலியன் பூங்காவில் இந்தப் பரப்புரைக் கூட்டம் ஆரம்பமாகும்.

இதில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் உரையாற்றவுள்ளனர். அத்துடன், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சிறப்புரையாற்றவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *