தீர்ப்பின் பின்னர் மஹிந்தவை நேரில் சந்தித்தார் கோட்டாபய! – ‘மொட்டு’வின் முக்கியஸ்தர்கள் வாழ்த்து
பிரஜாவுரிமை தொடர்பான தமக்கு எதிரான வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதையடுத்து சற்றுமுன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் மஹிந்த ராஜபக்சவையும், அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்களையும் நேரில் சந்தித்தார் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச.
இதன்போது கோட்டாவை வாழ்த்திய பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தர்கள் பெரும் எடுப்பில் ஜனாதிபதித் தேர்தலுக்கானப் பணிகளை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர்.