பெருமெடுப்பில் நடந்தேறிய சு.கவின் குருணாகல் மாநாடு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குருணாகல் மாவட்ட மாநாடு அம்மாவட்டத்தில் இன்று பெருமெடுப்பில் நடைபெற்றது.

இதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிரேஷ்ட துணைத் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர, சு.கவின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க, வடமேல் மாகாண ஆளுநர் பேசல ஜயரத்ன, சு.கவின் சிரேஷ்ட மற்றும் இளம் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், மதத்தலைவர்கள் எனப் பலர் கலந்துகொண்டார்கள்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சு.கவின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் இந்த மாநாட்டில் உரையாற்றினார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *