பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இன்று புடைசூழ தேரேறி வந்தான் சந்நிதியான்!

ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்தத் தேர்த்திருவிழா இன்று வெள்ளிக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘அரோஹரா’ கோசத்துடன் வடம்பிடித்திழுக்க ஆற்றங்கரையான் தேரேறி வலம்வந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

அடியார்களின் இன்னல்களை அழிக்கும் அன்னதானக் கந்தன் அலங்காரத்துடன் இரதோற்சவத்தில் வலம் வந்த காட்சிகளைப் படங்களில் காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *