ரயில் மோதி கோர விபத்து! தாயும் மகனும் பரிதாபச் சாவு!! – தந்தையும் மற்றொரு மகனும் உயிருக்குப் போராட்டம்
அம்பலாங்கொடை – கந்தேகொட பகுதியில் பாதுகாப்பின்றி ரயில் கடவையில் பயணித்த வான் ஒன்றின் மீது ரயில் மோதி இடம்பெற்ற விபத்தில் வானில் பயணித்த தாய் மற்றும் மகன் பலியாகியுள்ளனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த தந்தை மற்றும் மற்றுமொரு மகன் ஆகியோர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று வியாழக்கிழமை பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் மேலும் கூறினர்.