ஹாட்லியின் தொழிநுட்பக்கூடத்தைத் திறந்து வைத்தார் சுமந்திரன் எம்.பி.!

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் 6 கோடி ரூபா செலவில் புதிதாக அமைக்கப்பட்ட மூன்று மாடி தொழில்நுட்பக்கூடம் இன்று திங்கட்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

கல்லூரி அதிபர் த.முகுந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தொழில்நுட்பக்கூடத்தைத் திறந்துவைத்தார்.

இந்த நிகழ்வில் வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் யோ. ரவீந்திரன், ஓய்வுநிலைக் கல்விப் பணிப்பாளர் எஸ். நந்தகுமார், பருத்தித்துறை நகர பிதா யோ. இருதயராஜா, பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் அ.சா. அரியகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *