ரணில் – சஜித் நேரடிச் சந்திப்பு செவ்வாய் வரை ஒத்திவைப்பு!
ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்துக்குத் தீர்வு காணும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த சந்திப்பு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை குறித்த சந்திப்பு இடம்பெறும் என ஐ.தே.கவின் தவிசாளரான அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்தார்.