பதவி துறந்தவர்கள் மீண்டும் பதவியேற்பு!
இராஜாங்க அமைச்சர் பதவிகளிலிருந்து இராஜிநாமா செய்திருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மொஹமட் பைசல் காசீம், அலி சாஹிர் மெளலானா செயிட் ஆகியோர் இன்று (23) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் மீண்டும் இராஜாங்க அமைச்சர்களாகப் பதவிப்பிரமாணம் செய்தனர்.
இதற்கமைய பைசல் காசீம் போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சராகவும், அலி சாஹிர் மெளலானா செயிட் ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்தனர்.