சவேந்திர சில்வாவின் நியமனம் தமிழரை அவமதிக்கின்ற செயல்! – கூட்டமைப்பு போர்க்கொடி

“இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா நியமனம் செய்யப்பட்டமை தமிழர்களை அவமதிக்கும் செயலாகும்” என்று கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

“போர்க்குற்றச்சாட்டுக்கள் சாட்டப்பட்டுள்ள ஒருவர் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை தமிழர்களை அவமதிப்பதாகும். இது எங்களுக்கு அதிர்ச்சியைத் தருகின்றது. இது குறித்து நாங்கள் அதிருப்தியைத் தெரிவிக்கின்றோம்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *