யாழ். விபத்தில் இளைஞர் பலி!

யாழ். உரும்பிராய் – கிருஷ்ணன் கோவில் முன்பாக டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை 6.45 மணியளவில் இடம்பெற்றது.

இயக்கச்சியைச் சேர்ந்த க.செந்தமிழ் (வயது – 22) என்பவரே உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிள் சடுதியாக வீதியைக் கடந்த நிலையில் பிரதான வீதியில் பயணித்த குறித்த நபர் நிலைகுலைந்து டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்து இடம்பெற்றது என்று தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *