வியாழனன்று ஐ.தே.கவின் விசேட செயற்குழுக் கூட்டம்!
ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளைமறுதினம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
ஐ.தே.க. தலைமையில் உதயமாகவுள்ள புதிய அரசியல் கூட்டணி, ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் உட்பட மேலும் சில விடயங்கள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளன.
இந்தக் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு செயற்குழு உறுப்பினர்களுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.