உயிர்துறக்கும் நிலையில்கூட தங்கையின் உயிர்காத்த பாலகி! – சிரியாவில் பெரும் துயர்

சிரியாவில் இடம்பெறும் கொடூர போரில் இறக்கும் நிலையில்கூட தனது தங்கையின் உயிரைக் காப்பாற்றிய 5 வயதேயான சிறுமியின் செயல் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. இது தொடர்பான தகவல்களும், ஒளிப்படங்களும் வைரலாகப் பரவி வருகின்றன.

சிரியாவின் அரச தரப்புக்கும் – கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் அங்கு தற்போது கடும் மோதல் இடம்பெற்று வருகின்றது.

கடந்த புதன்கிழமை இட்லிப் மாகாணத்திலுள்ள அரிஹா என்ற பகுதியில் கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து அரச தரப்பு வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் அரிஹா பகுதியிலிருந்த 5 மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது. அப்போது, அம்ஜத்அல் அப்துல்லா என்பவரது வீடும் நொறுங்கியது. இதில் வீட்டில் இருந்த அப்துல்லா மற்றும் அவரது மனைவி ஆஸ்மா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த அவர்களது 5 வயது மகள் ரிஹாம் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். இடிபாடுகளில் சிக்கிய தனது 7 மாத தங்கையான துகா கீழே விழுந்துவிடக்கூடாது என்பதற்காக அவரின் சட்டையை இறுக்கமாக பிடித்துக்கொண்டார். இதனால் அந்தக் குழந்தை கீழே விழாமல் காயங்களுடன் உயிர் தப்பியது. ஆனால், தங்கையை காப்பாற்றிய சிறுமி ரிஹாம் பரிதாபமாக உயிரிழந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *