யாழ்ப்பாணக் கோட்டை அந்தோனியார் சிலை விஷமிகளால் உடைப்பு! – சில மீற்றர் தூரத்திலேயே பொலிஸ் நிலையம்

யாழ்ப்பாணக் கோட்டைப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த புனித அந்தோனியாரின் திருச்சொரூபம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. குறித்த சொரூபத்துக்கு சில மீற்றர்கள் தூரத்திலேயே யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையம் அமைந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் கிறிஸ்தவ மக்களின் வணக்கத்துக்குரிய கடவுள்களின் சிலைகள் உடைக்கப்படும் சம்பவங்கள் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. கடந்த ஜூன் மாதம் 17ஆம் திகதி யாழ்ப்பாணம் மணியம்தோட்டம் பகுதியில் இருந்த மாதா சொரூபம் அடையாளம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டது. மீன்பிடித் தொழிலுக்காக அந்தப் பகுதிக்கு வந்த சிலர் சொரூபம் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு பொலிஸாருக்கும், பிரதேச வாசிகளுக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

மண்டைதீவு சந்தியில் அமைக்கப்பட்டிருந்த புனித பேதுருவின் சிலை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடைக்கப்பட்டது. தற்போது புதின அந்தோனியாரின் சிலை உடைக்கப்பட்டுள்ளமை கிறிஸ்தவ சமூகத்தின் மத்தியில் கடும் அதிருப்தியையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *