வெளிநாட்டிலிருந்து வந்த மனைவியை கொடூரமாகக் கொலைசெய்த கணவன்!

வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த மனைவியைக் கத்தியால் குத்திக் கொலைசெய்த கணவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

குறித்த இருவருக்கும் இடையில் நீண்டகாலமாக முரண்பாடு இருந்து வந்துள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹசலக பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதான ஸ்ரீயானி தயாரத்ன என்ற 3 பிள்ளைகளின் தாயே கொலைசெய்யப்பட்டுள்ளார்.

கத்திக் குத்துக்கு இலக்கான மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவரது சடலத்தை வயல் வெளியில் வைத்து கணவர் எரித்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து இரண்டு வருடங்களுக்குப் பின்னர் நாடு திரும்பிய மனைவியே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

தாயகம் திரும்பிய பெண், வீட்டுக்குச் செல்லாமல் தனது தாயாரின் கம்பளை வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு ஒரு வாரம் தங்கியிருந்த அவர் தனது தாயாருடன் நேற்றுமுன்தினம் கணவரின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இன்று காலை தாயாரைக் கண்டி பஸ்ஸில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்த நிலையில் கணவருடன் மனைவிக்கு மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது கணவர் மனைவியைக் கத்தியால் குத்திக் கொலைசெய்துள்ளார்.

பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த கணவன் நாளை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *