சிரேஷ்ட ஊடகவியலாளர் தில்லைநாதன் காலமானார்!

சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ். தில்லைநாதன் தனது 75​ஆவது வயதில் நேற்றுக் காலமானார்.

வீரகேசரி பத்திரிகையில் தனது ஊடகப் பணியை ஆரம்பித்த இவர், தினகரன், தினகரன் வாரமஞ்சரியின் பிரதம ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளதுடன் 50 ஆண்டுகளுக்கு மேல் ஊடகத்துறையில் பணியாற்றியுள்ளார்.

அத்துடன் தினபதி, சிந்தாமணி ஆகிய பத்திரிகைகளிலும் கடமையாற்றியுள்ள இவரது சேவையைப் பாராட்டி, இலங்கைப் பத்திரிகைப் பேரவை ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *