கல்முனையில் இன்றிரவு ஆயிரம் தீபங்கள் ஏற்றல்!

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை முழு அதிகாரம் கொண்ட பிரதேச செயலகமாகத் தரமுயர்த்தக் கோரியும், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் சர்வமதப் பிரார்த்தனையும் 1000 தீபங்கள் ஏற்றும் நிகழ்வும் இன்றிரவு நடைபெற்றது.

உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படும் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் முன்பாக இடம்பெற்ற இந்த நிகழ்வில் இந்து, கிறிஸ்தவ மற்றும் பௌத்த மதங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *