‘கோப்’ குழு விசாரணைக்குள் மாட்டிய தொண்டமான் எம்.பி.!

தொண்டமான் பவுண்டேசனில் இடம்பெற்றதாகச் சொல்லப்படும் நிதி முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஆரம்பித்துள்ள நாடாளுமன்ற ‘கோப்’ குழு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் எம்.பி., முன்னாள் தலைவர் முத்து சிவலிங்கம் எம்.பி. உட்பட மேலும் சில முக்கியஸ்தர்களை விசாரணைக்கு அழைத்துள்ளது.

இதன்படி நாளைமறுதினம் வியாழக்கிழமை ஆஜராகுமாறு நாடாளுமன்றக் கோப் குழு இவர்களுக்கு அறிவிப்பை விடுத்துள்ளது.

தொண்டமான் பவுண்டேசனின் நிதி கையாளப்பட்டதில் இடம்பெற்றதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டுக்கள், இந்தியப் பெண் ஆலோசகர் ஒருவர் நீண்ட காலம் பெரியளவில் சம்பளம் பெற்றமை உட்பட்ட பல விடயங்களை மேற்படி கோப் குழு விசாரித்து வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *