வரவேற்ற கையே வழியனுப்பியது!!

 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை தொடக்கம் இன்று மாலை வரையான இருபத்து நான்கு மணித்தியாலங்களில் மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

நேற்று மாலை மாலைதீவு சென்ற அவர், இன்று முற்பகல் இலங்கை வந்தார். அவர் இரு நாடுகளிலும் 15 நிகழ்வுகளில் கலந்துகொண்டார்.

இன்று மாலை கொழும்பிலிருந்து மீண்டும் புதுடில்லிக்குப் புறப்பட்டார் இந்தியப் பிரதமர்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வரை சென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவரை வழியனுப்பி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *