களமிறங்கினார் மோடி! – வரவேற்றார் ரணில்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வந்துள்ளார்.
முற்பகல் 11 மணிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரவேற்றார்.
இன்று நான்கு மணித்தியாலங்கள் மட்டும் இலங்கையில் தங்கி நிற்கும் மோடி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொது எதிரணியினர் மற்றும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆகியோருடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.