எம்மீதான அடக்குமுறைகளை ஐ.நாவிடம் எடுத்துரைப்போம்! – ரிஷாத் எம்.பி. தெரிவிப்பு

“எமது முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளையும், எமது முஸ்லிம் சமூகத்தினர் மீதான சிங்களப் பௌத்த பேரினவாதத்தின் அடக்குமுறைகளையும் ஐக்கிய நாடுகள் சபையிடம் எடுத்துரைக்கவுள்ளோம்.”

– இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

“இலங்கையில் உள்ள ஐ.நா. பிரதிநிதியை இதற்காகச் சந்திக்கவுள்ளோம். அதேபோல், இஸ்லாமிய சர்வதேச கூட்டமைப்பின் கவனத்துக்கும் கொண்டுவரவுள்ளோம்” என்று அவர் மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *