11 ஆயிரம் கிலோ குப்பைகள், கழிவுகள் எவரெஸ்ட்டில் இருந்து அகற்றப்பட்டன! – 4 சடலங்களும் கண்டெடுப்பு

எவரெஸ்ட் சிகரத்தில் 11 ஆயிரம் கிலோ எடையுடைய குப்பைகள், கழிவுகள் அகற்றப்பட்டன.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி முதல் இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் தூய்மைப்படுத்தும் பணியை நேபாள அரசு தொடங்கியது.

சுமார் இரண்டு மாதங்கள் நடைபெற்ற தூய்மைப்பணி நேற்று முடிவடைந்தது.

இதில், காலியான ஒக்சிஜன் சிலிண்டர்கள், பிளாஸ்டிக் போத்தல்கள், பற்றரிகள் உட்பட மொத்தம் 11 ஆயிரம் கிலோ குப்பைகள் அகற்றப்பட்டன. மேலும், 4 பேரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *