குருணாகல் வைத்தியசாலைக்கு முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம்!

குருணாகல் வைத்தியசாலைக்கு முன்பாக தற்போது மாபெரும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையால் அங்கு பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.

குருணாகல் வைத்தியசாலையில் சிசேரியன் சத்திர சிகிச்சை என்ற போர்வையில் சிங்களப் பெண்களுக்குக் கருத்தடை சத்திர சிகிச்சை செய்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ள மகப்பேற்று வைத்தியர் சேகு சியாப்டீன் மொஹமட் ஷாபிக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

“வைத்தியர் சேகு சியாப்டீன் மொஹமட் ஷாபி மீதான விசாரணைகளுக்கு அரச தரப்பால் அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றது. அத்துடன், விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வைத்திய சரத் வீரபண்டாரவுக்கு இடமாற்றம் வழங்க சுகாதார அமைச்சு முயற்சிக்கின்றது. இதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். வைத்தியர் ஷாபிக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளவர்கள் கோஷம் எழுப்புகின்றனர்.

தேரர்கள் உட்பட இரண்டாயிரதுக்கும் அதிகமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக குருணாகல் பகுதியிலுள்ள கடைகள் மூடப்பட்டு, தீவிர பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

பெருமளவு மக்கள் ஒன்றுகூடியுள்ள நிலையில், அந்தப் பகுதியில் பரபரப்பு நிலை காணப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *