இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று இரண்டாவது தடவையாகவும் பிரதமராகப் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்துகொள்ளவுள்ளார்.
எதிர்வரும் 30ஆம் திகதி புதுடில்லியில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.