கொழும்பு பாடசாலைகளுக்குள் இன்று காலை புகுந்தார் மஹிந்த!
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச இன்று காலை கொழும்பில் உள்ள பிரதான பாடசாலைகளுக்குத் திடீரெனச் சென்றார். அங்கு அதிபர்களைச் சந்தித்து பாதுகாப்பு நிலைமைகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.
“மாணவர்களின் வருகை பாதுகாப்பு காரணங்களால் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் பாதுகாப்பு குறித்து நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அதன் காரணமாகவே நான் பாடசாலைகளுக்கு வந்தேன்” – என்று இதன்போது மஹிந்த தெரிவித்துள்ளார்.