சிலாபம் நகரில் பதற்றம்; ஊரடங்குச் சட்டம் அமுல்!

சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர அறிவித்துள்ளார்.

சிலாபம் நகரில் இன்று காலை ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து அங்கு பதற்றம் நிலவுகின்றது. இதனையடுத்துப் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 4 மணி வரையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *