தகாத உறவில் ஈடுபட்ட பெண் அடித்துக்கொலை!
ஆனமடுவ – ரபவேவ பிரதேசத்தில், பெண்ணொருவர் தடி ஒன்றால் அடித்துக் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
பொரலுவேவ – திபிரிபொகுன பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார்
குறித்த பெண் வேறொருவருடன் தகாத தொடர்பைப் பேணி வந்த காரணத்தாலேயே, அவர் கொலைசெய்யப்பட்டார்.
நேற்று இடம்பெற்ற இந்தக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவரைக் கைதுசெய்வதற்கு ஆனமடுவப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.